Loading...
Thursday 26 May 2011

அதிரைக்குத் 'தேத்தண்ணி' வந்த கதை! (ஒரு செவிவழிச் செய்தி) அதிரை அஹ்மது

தேத்தண்ணி

'வாவன்னா'  குடும்பத்தைச் சேர்ந்த  'ஆவ்மி ஹாஜியார்' என்ற அஹ்மது  முஹிதீன் ஹாஜியார் பாய்மரக்  கப்பலுக்குச் சொந்தக்காரராகிப்  பன்னாட்டு வணிகம் செய்த  தனவந்தர்.  பெரும்பாலும்  அவரது கப்பல் உள்நாட்டுத்  துறைமுகங்களிலும், இலங்கையிலும், சிலபோது அரபு நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்யும் வழக்கம்.  


இவ்வாறான பயணங்களுள் ஒன்றில், அப்போது அவர் தனது வணிகக் குழுவுடன் மக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார்.
"முதலாளி!  காற்று திசை மாறி அடிக்குது!" என்று குரல் கொடுத்த  கப்பலோட்டியை நெருங்கிச் சென்ற ஹாஜியார், "கொஞ்ச நேரம் கப்பலை அதன் போக்கில் ஓடவிடு" என்று ஆணை பிறப்பித்தார்.  கப்பலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேயிலைப் பொட்டலங்கள் அடங்கிய கள்ளிப் பெட்டிகள்  மாலுமிக்குப் பாரமாகத் தெரிந்தது.  வெள்ளையர்கள் அமெரிக்கத துறைமுகம் ஒன்றில் செய்தது போன்று, ('Boston Tea Party' ) அவற்றைக் கடலில் தள்ளிவிடலாமா என்றுகூட எண்ணினார் மாலுமி. முதலாளிக்கு பயந்து, அவ்வாறு செய்யவில்லை.  சற்று நேரத்தில் அவர், "அந்தோ.... கோட்டைப்பட்டினத்து தர்ஹா தெரியுது" என்று உணர்ச்சிப் பெருக்கில் கூவினார்.


"ஓட்டு  அந்தப் பக்கம்!" என்ற முதலாளியின் ஆணைக்கொப்ப, மாலுமி தன தலைப்பாகையை இறுகக் கட்டிக்கொண்டு கண்ணில் தென்பட்ட கரையை நோக்கிக் கப்பலைச் செலுத்தினார்.  ஒருவாறாக, பத்திரமாகப் பயணக் குழுவினர் கரையை அடைந்து, தரையில் கால் வைத்தபோது, "வாங்க, வாங்க" என்ற வரவேற்புக் குரல்களைக் கேட்டு வியந்து நின்றனர்!  அவர்கள் அந்த ஊர்த் தலைவர்கள் என்பது பிறகுதான் தெரிந்தது.  'எல்லாம் இறைவன் செயல்' என்பதை உணர்ந்துகொண்ட ஹாஜியார், அவ்வூர்க்காரர்களின் வீடுகளில் நடந்த விருந்தோம்பலில் திக்குமுக்காடிப் போனார். 




ஹாஜியாரின்  பார்வை எதையோ தேடிக்கொண்டிருந்ததை உணர்ந்த தலைவர் ஒருவர், "என்ன ஹாஜியார்!?" என்றார்.  "தேத்தண்ணியைத் தேடுறேன்" என்ற ஹாஜியாரிடம், "அது என்னது தேத்தண்ணி?!" என்றார் முன்னவர்.  "அது, நான் அரபு நாட்டில் இருந்தபோது அரபிகளோடு சாப்பிடும்போது மறவாமல் குடிக்கும் 'சுலைமானி' என்ற பானம்" என்று விளக்கிய ஹாஜியாரிடம், "அப்படி ஒரு சாமான் எங்களுக்குத் தெரியாது" என்று கைவிரித்தனர் அங்கிருந்தோர். 
"கப்பலில்  இருக்கும் கள்ளிப் பெட்டி ஒன்றைத் திறந்து எடுத்து வா" என்ற ஹாஜியாரின் கட்டளையைச் செவியேற்று, அவரின் பணியாட்கள் சற்று நேரத்தில் தேயிலைப் பாக்கெட்டுகளை எடுத்துவந்தனர்.  சிறிது நேரத்தில் 'சுலைமானி' தயாராயிற்று.  அனைவரும் அந்த அரிய பானத்தை அருந்தி மகிழ்ந்தனர்.




ஓரிரு நாட்கள்  அங்கே தங்கி ஓய்வெடுத்த பின்னர், அந்த ஊர்க்காரர்களிடம் பயண வழிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, ஹாஜியாரும் அவருடைய பயணக்  குழுவும் சொந்த ஊரான அதிரைக்கு விரைந்தனர்.  "அல்லாடே காவலா போய்ட்டு வாங்க ஹாஜியாரே!" என்று கோட்டைப்பட்டினத்தார் வழியனுப்பிவைத்தனர்.




'கோட்டைப்பட்டினத்துக்குத் தெரியாதது நம்மூருக்கும் புதிதுதான்' என்று சிந்தித்த அஹ்மது முஹிதீன் ஹாஜியார், இன்று நாம் கணினி மென்பொருள்களை ஊரில் அறிமுகம் செய்வது போன்று, அன்று அதிரையில் அறிமுகம் செய்து வைத்ததுதான் 'தேயிலை' என்ற அற்புதப் பொருள்.

10 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

மாஷா அல்லாஹ்.தேத்தனிக்குள் இத்தனை சுவாரசிய தகவல்.ஒரு கப் தேத்தணி குடிச்ச திருப்தி.யாரங்கே?அஹமது சாச்சாவுக்கு மொத்தள்ள ஒரு கப் தேத்தணி குடுங்க.

இப்னு அப்துல் ரஜாக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
எங்களுடைய
மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

விமர்ச்சகன் said...

அதிரையில் பரபரப்பு !!!!!:www.adiraikural.blogspot.com

Shameed said...

தேத்தண்ணி ஆறி நீத்துபோச்சு வேறு ஏதாவது போடுங்கள்

Unknown said...

“பால் கலக்காத “டீ” சாப்பிட்டால் உடல் எடை குறையும்” என ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.
உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால், அதில் கலக்கப் படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்து விடுகிறது.
எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
-

Unknown said...

- நன்றி: 'அதிரை. இன்'

ஜாகிர் ஹீசைன் said...

பாரம்பரிய மிக்க சித்தீக் பள்ளியைப்பற்றி கொஞ்சம் அறிய தரலாமே

Unknown said...

இந்த இணைப்பில் உள்ள தகவலுக்குத் தொடர்பில்லாத 'கமென்ட்' சகோ. ஜாகிர்! இருப்பினும் பதில் தருவேன்.

நானொன்றும் ஆக்கிரமிப்பாளர்களுள் ஒருவனல்லன் (அப்படி நீங்கள் நினைத்திருந்தால்.)

இதில் எவராவது தவறிழைத்திருந்தால், அவர்கள் திருந்தட்டும்; அதிரைச் சமூகத்தில் ஒற்றுமை நிலவட்டும் எனக் காத்திருப்பவன் நான்.

ஜாகிர் ஹீசைன் said...

அதிரை அஹமது காக்கா அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நான் கேட்டது அதிரை வரலாறைப்பற்றி, சித்தீக் பள்ளி அதிரையில் இல்லையா அல்லது இதற்கு பாரம்பரியம் இல்லையா அதிரை வரலாறு என்ற வலைதலத்தில் இதைப்பற்றி தெறிந்துக்கொள்ளலாம் என்றுதான் நான் கேட்டேன்

உங்களைப்பற்றி நான் கேள்கவில்லை

என்னுடைய கேள்வியை திரும்பவும் படித்துப்பாருங்களேன்

//பாரம்பரிய மிக்க சித்தீக் பள்ளியைப்பற்றி கொஞ்சம் அறிய தரலாமே//

உங்களுடைய தவரான புரிதலுக்கு நான் வருந்துகிறேன்

Unknown said...

ஆ... அப்பட்டியா...? வருந்தற்க. இந்த விஷயம் இன்னும் சூடு பிடித்து வரலாறாகும்போது, வரலாற்றை வரலாறாகவே எழுதலாம். என்னுடைய தவறான புரிதலுக்குக் காரணம், 'ஜாகிர்' என்ற பெயரில் ஒருவர், நான் எதைப்பற்றி எழுதினாலும்,அதில் உள்ள மையக் கருத்தைப் பார்க்காமல், 'க்ரிட்டிசைஸ்' பண்ணியே பின்னூட்டம் இட்டு வருகின்றார். அவர்தான் இவரோ என்ற நினைப்பில்............!

Labels

 
TOP